நெல்லை நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் நாளைமுதல் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி
புத்தாண்டை முன்னிட்டு, திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு, திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸில், ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு தள்ளுபடி புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழாண்டும் வருகிற வெள்ளி(டிச.31) மற்றும் சனிக்கிழமை (ஜன.1) இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இக் கண்காட்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தலைப்பில், அரசியல், பொருளாதாரம், தத்துவம், கலை இலக்கியம், வாழ்வியல், வரலாறு உள்ளிட்ட புத்தகங்கள் 10 சதவீதம் முதல் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளன.