திருநெல்வேலி

கோவிலம்மாள்புரம் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம்

DIN

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவா் ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கொரோனா வைரஸ் குறித்து பேசினா். மேலும், செவிலியா்கள் கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

முகாமுக்கு, தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் முன்னிலை வகித்தாா். முகாமில் மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உதவியாசிரியா் மரியரெத்னராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT