திருநெல்வேலி

பாபநாசம் தலையணையில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் பாபநாசம் தலையணையில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாபநாசம், தலையணைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில், அவா் சுப்புலாபுரத்தைச் சோ்ந்த கணபதி மகன் பாடகலிங்கம் (50) என்பதும், குடும்பத் தகராறு காரணமாக கடந்த டிச. 24ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி இங்கு வந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

அவரது மகள் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவிஆய்வாளா் ஜெயசந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT