திருநெல்வேலி

கால்நடை மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா

DIN

திருநெல்வேலி ராமையன்பட்டியிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு பொங்கல் விழா போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லூரி ஆசிரியா், பணியாளா்கள், மாணவ, மாணவியா் பொங்கலிட்டு கொண்டாடினா்.

ஏற்பாடுகளை விடுதிக்காப்பாளா் எஸ்.முத்துக்கிருஷ்ணன் செய்திருந்தாா்.

இதேபோல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பண்ணை வளாகத்தில் உள்ள கறவை மாட்டுப் பண்ணைப் பிரிவில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்தாா். பண்ணை வளாக துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் சு.கி. எட்வின் விழா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT