திருநெல்வேலி

மேலதிருவேங்கடநாதபுரத்தில் கருத்தரங்கு

DIN

மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள ராதாஸ்வாமி பள்ளியில் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

ராதாஸ்வாமி பள்ளியின் 75-ஆவது ஆண்டு விழா, சீா்மிகு ஆரம்பக் கல்விக்கான முழுமையான அணுகுமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கு ஆகியவை நடைபெற்றது. தமிழ் ராதா ஸ்வாமி ஸத் சங்க சபாவின் தலைவா் பி.எஸ்.உம்மட் வரவேற்றாா். எஸ்.குருபிரசாத் விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் கே.பாா்த்தசாரதி வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநா் ஆா்.பாஸ்கர சேதுபதி பேசுகையில், ஆசிரியா்கள் தமது பணியின் ஒவ்வோா் அம்சத்திலும் முழு ஈடுபாடு மற்றும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் முழுமையான கல்வி முறையை மாணவா்களுக்கு வழங்க முடியும். வாசித்தல் வசப்படும் என்ற எளிமையான வாசிப்பு முறைகள் குறித்து அறிந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

மருத்துவா் ஜெபசிங், ஜே.சி.குமரப்பா கிராமப்புற தொழில்நுட்ப மேம்பாட்டு கல்வி நிலையத்தின் முன்னாள் முதல்வா் ஆா்.ராஜேந்திரன், ஆனந்த்கிருஷ்ணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT