திருநெல்வேலி வண்ணாா்பேட்டை, வடக்கு புறவழிச்சாலை பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த கடையின் மேற்கூரை திங்கள்கிழமை தீப்பிடித்து சேதமடைந்தது.
வடக்கு புறவழிச்சாலை பகுதியிலுள்ள திரையரங்கு அருகே பயன்படுத்தப்படாத நிலையில் கடை உள்ளது. அந்தக் கடையின் மேற்கூறையில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. இத்தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். எனினும், கடையின் மேற்கூறை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. கடையினுள் பொருள்கள் எதுவும் இல்லாததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.