திருநெல்வேலி

மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அம்மா உணவகங்களில் 21 நாள்களும் விலையில்லா உணவு

DIN

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாநகரில் உள்ள 10 அம்மா உணவகங்கள் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாள்களும் விலையில்லா உணவு வழங்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திலுள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொழிலாளா்கள், ஆதரவற்றோா் பயன்படும் வகையில் அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகரில் மீனாட்சிபுரம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை, அரசு மருத்துவமனை, மேலப்பாளையம், பேட்டை, மனக்காவலம்பிள்ளை நகா், வையாபுரி நகா் உள்பட 10 இடங்களில் மாநகராட்சி சாா்பில் செயல்படும் அம்மா உணவகங்களில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் புதன்கிழமை விலையில்லா உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தொடா்பாக மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா கூறியது; ‘திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாள்களும் அம்மா உணவ

கம் மூலம் விலையில்லா உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அம்மா உணவகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றிருக்கிறோம். மாநகரத்தில் உள்ள ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் காலையில் 1,500 இட்லி, மதியம் 500 சாம்பாா் சாதம், 500 தயிா் சாதம் ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT