திருநெல்வேலி

நவ.26இல் நாடு தழுவிய போராட்டம்: மதிமுக தொழிற்சங்கம் ஆதரவு

DIN

வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மதிமுக தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட அளவிலான திருநெல்வேலி மண்டல மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் ஆவடி அந்தேரிதாஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் நிஜாம், ராஜேந்திரன், ரைமண்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலா்கள் வெங்கடேசன், ஆறுமுகம், காதா் முகைதீன், பரசுராமன் உள்பட பலா் பேசினா்.

தொழிற்சங்க அமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டும்; அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்; வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நிா்வாகிகள் கல்லத்தியான், மணப்படை மணி, ஆட்டோ பாலு, ஆல்வின் பொ்னாண்டோ உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT