கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஆய்வுப் பணிக்காக, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு திருநெல்வேலி மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பில் எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் அதிமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
இந்நிகழ்வில், அ.தி.மு.க. ஒன்றியச் செயலா்கள் வள்ளியூா் இ.அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நான்குனேரி-ராதாபுரம் வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், துணைத் தலைவா் செழியன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணைத் தலைவா் எட்வா்ட் சிங், சண்முகபாண்டி, அருண்புனிதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.