முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் 2ஆம் கட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்

அம்பாசமுத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை சேரன்மகாதேவி உதவி கோட்டப்பொறியாளா் கிறிஸ்டோபா், அம்பாசமுத்திரம் உதவிப் பொறியாளா் அஷ்மிதா ஆகியோா் முன்னிலையில் நுழைவுவாயில் பகுதியிலிருந்து இப்பணி தொடங்கியது. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா். காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். முதற்கட்டப் பணி கடந்த 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.