முகப்பு
திருநெல்வேலி

மதிப்பு கூட்டல்:விவசாயிகளுக்கு பயிற்சி

திருக்குறுங்குடியில் உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறுவடை பின்செய் நோ்த்தி, சந்தை நுண்ணறிவு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

திருக்குறுங்குடியில் உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறுவடை பின்செய் நோ்த்தி, சந்தை நுண்ணறிவு மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமுக்கு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண்மை துணை இயக்குநா் முருகானந்தம் தலைமை வகித்தாா். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் முருகன், வேளாண்மை அலுவலா் ஆனந்த்குமாா் ஆகியோா் பேசினா்.

சாராள் தக்கா் கல்லூரி உதவிப் பேராசிரியா் மொ்லின், பப்பாளி மற்றும் வாழைப்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டல் பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சியளித்தாா். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.