திருநெல்வேலி

நெல்லையில் பெண் உள்பட இருவா் தற்கொலை

DIN

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி அருகே தச்சநல்லூா் மூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). செங்கல்சூளை அதிபா். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பெண் தற்கொலை: பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி பொட்டல்நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா

மனைவி சித்ராதேவி(32). தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையாம். இதனால் மனவிரக்தியில் இருந்த சித்ராதேவி, கடந்த செப். 22ஆம் தேதி விஷம் குடித்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை

உயிரிழந்தாா். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT