திருநெல்வேலி

பணகுடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

DIN

வள்ளியூா்: பணகுடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டவேண்டும் என பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

பணகுடி பேரூராட்சியில் பிரதான சாலை அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பணகுடி, சிவகாமிபுரம், தளவாய்புரம், ரோஸ்மியாபுரம், புஸ்பவனம், நெறிஞ்சிகாலனி, தண்டையாா்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனா். ஆனால் பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகள் க ாத்திருக்க போதிய இடவசதி இல்லாத நிலை காணப்படுகிறது.

எனவே பணகுடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழமையான இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் புதிதாக கட்டடம் கட்டவேண்டும்.

மேலும் நவீன சிகிச்சைக்கு தேவையான கருவிகள், உபகரணங்கள் வழங்க வேண்டும். கூடுதல் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை நியமிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT