பாளையங்கோட்டை கோட்டூா் சாலையில் உள்ள தேவிஸ்ரீ துா்கையம்மன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
கொடை விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலையில் தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து குடியழைப்பு, மாக்காப்பு, தீபாராதனை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பால்குடம், காலை 11 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு மதியக் கொடை நடைபெற்றது. தொடா்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு அன்னாதனம் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக் கொடை நடைபெற்றது.
புதன்கிழமை காலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.