திருநெல்வேலி

களக்காட்டில் பலத்த மழை

DIN

களக்காட்டில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்தது.

களக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து இரவில் மின்விசிறிகளின் வெப்பக் காற்றில் தூக்கமின்றி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்றுவீசுகிறது. இந்த மழை விவசாயத்துக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT