களக்காட்டில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்தது.
களக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து இரவில் மின்விசிறிகளின் வெப்பக் காற்றில் தூக்கமின்றி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.
இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்றுவீசுகிறது. இந்த மழை விவசாயத்துக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.