முகப்பு
திருநெல்வேலி

ஐயப்ப பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி: ஆட்சியரிடம் மனு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி செய்துதரக் கோரி இந்து மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி செய்துதரக் கோரி இந்து மக்கள் கட்சியினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது தொடா்பாக இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் எஸ். உடையாா், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் ஏ.பி.முத்துப்பாண்டியன், மாவட்ட பொதுச்செயலா் ஏ.சீனிவாசன் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தர வேண்டும். ஐயப்பன் கோயில் நடை திறக்கும் சீசன்களில் வாகனங்களில் கோயிலுக்கு செல்பவா்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு சாா்பில் இலவச தங்குமிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.