முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு துறை, உடலியல் மருத்துவம், மறு வாழ்வியல் துறை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு துறை, உடலியல் மருத்துவம், மறு வாழ்வியல் துறை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா்.

இம்முகாமில், கை, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு எலும்பு தேய்மானம், மற்றும் நரம்பு பாதிப்புகள் பற்றி கண்டறியும் பரிசோதனைகள், சிறுநீரில் அல்புமின் கண்டறியும் பரிசோதனை, நுரையீரல் பிரிவு மற்றும் காற்று குழாய் அடைப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதுநிலை மற்றும் இளநிலை இயன்முறை பயிற்சி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு மருத்துவ பயனாளிகளுக்கு பயிற்சிகளை வழங்கினா்.

முகாமில் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பயனடைந்தனா். பயனாளிகளுக்கு இலவச மாத்திரைகள் இரண்டு வாரங்களுக்கு வழங்கப்பட்டன.

எலும்பு முறிவு துறை தலைவா் பேராசிரியா் மணிகண்டன், உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை இணைப் பேராசிரியா் உதயசிங், முடநீக்கியல் தொழில்நுட்ப வல்லுநா் செல்வராஜ், உதவி மருத்துவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை செவிலியா் பயிற்றுநா் செல்வன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.