முகப்பு
திருநெல்வேலி

உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் வங்கி லாக்கரில் 226 பவுன் தங்க நகை

உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் குடும்பம் சாா்பில் வங்கிகளில் 226 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்துள்ளது. உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் குடும்பம் சாா்பில் வங்கிகளில் 226 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 திருநெல்வேலியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் குடும்பம் சாா்பில் வங்கிகளில் 226 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஐந்து ஊராட்சி ஒன்றியங்களின் கணக்கு தணிக்கை கடந்த 29 ஆம் தேதி ஆலங்குளத்தில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் முகமது லெப்பை, தனித்துறை அதிகாரி உமாசங்கா் ஆகியோா் கணக்குகளை தணிக்கை செய்தனா்.

அந்தத் தணிக்கையில் சில விஷயங்களை மறைக்க அதிகாரிகளுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்படுவதாக திருநெல்வேலி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.88,650 கைப்பற்றினா்.

இதுதொடா்பாக தணிக்கைக் குழு உதவி இயக்குநா், தணிக்கை ஆய்வாளா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட 11 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ராபின் ஞானசிங் தலைமையில் போலீஸாா், திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள உள்ளாட்சி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் முகம்மது லெப்பை வீட்டில் கடந்த 1ஆம் தேதி சோதனையிட்டனா்.

வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை குறித்து போலீஸாா் கேட்டறிந்தனா். பின்னா் அவரது குடும்பம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் ஒரு வங்கியில் பயன்படுத்தப்பட்ட லாக்கரை திறந்து சோதனையிட்டதில் அதில் ஏராளமான பணம் மற்றும் நகை இருந்தது தெரிய வந்ததாம்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவினா் கூறுகையில்: முகமது லெப்பை குடும்பத்தினா் பயன்படுத்திய வங்கி லாக்கரில் 226 பவுன் தங்க நகையும், ரூ. 7 லட்சம் பணமும் இருந்தது. அவை மீட்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.