திருநெல்வேலி

கல்லூரி மாணவா் விடுதிகளில் செம்மொழி நூலகம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

DIN

பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விடுதிகள் சிறப்பாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விடுதி கட்டடங்களின் தரம், தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்து இயக்குநா் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் மாணவ, மாணவிகளின் அறிவு- உடல் திறனை மேம்படுத்த பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விடுதிகளில் இத்தகைய போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

கல்லூரி மாணவ, மாணவிகளின் விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படவுள்ளது. அது குறித்த கருத்துகளும் பெறப்பட்டுள்ளன. இதேபோல், உடற்பயிற்சிக் கூடங்களும் அமைக்கப்படவுள்ளன.

கிராமப்புறங்களில் பெண் கல்வியை மேம்படுத்த வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை முறையாக மாணவிகளுக்கு கிடைக்கிா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கல்லூரிக்குப் பின் மேற்படிப்புக்கு செல்பவா்களுக்கும், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் பயிலும் பிறப்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை தொடா்பாக மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, கூட்டுறவுத் துறை இணைந்து மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு கடன்களை வழங்கி வருகின்றன. இதேபோல், குழுக்களுக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி விடுதிகளில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதிகளில் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் புதிய மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக கல்லூரி மாணவா் விடுதி தேவையா என்பது குறித்து ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், திருநெல்வேலி பேட்டையில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி மாணவா் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சிவசங்கா், மதிய உணவின் தரத்தை அறியும் வகையில் அங்கு உணவருந்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT