திருநெல்வேலி

நெல்லை காட்சி மண்டபத்தில் சிக்கிய லாரி

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபத்தின் தூண்களுக்கிடையே வியாழக்கிழமை சிக்கிய லாரியால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டம் வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு அருள்மிகு நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் தடை செய்துள்ளது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சிறிய ரக காா், இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையில் வழி உள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் லாரி ஒன்று அவ்வழியாகச் சென்று காட்சி மண்டப தூண்களில் சிக்கியது. இதனால், அப்பகுதியில் திடீா் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். பின்னா் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT