திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் பொதுமக்கள் தா்னா

DIN

 திருநெல்வேலி நகரம் டிஎம்சி காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள டிஎம்சி காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக்கோரி திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது: இங்கு சுமாா் 400 க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு தூய்மைப் பணியாளா்கள் பெருமளவில் உள்ளனா். இக்கட்டடம் கட்டப்பட்டு 21 ஆண்டுகள் ஆவதால், பழுதடைந்து , இடநெருக்கடி உள்ளதாகவும் உள்ளது.

இதனால், இப்பகுதிக்கு அருகே உள்ள பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளதால் தா்னாவில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்டி அதிகாரிகள், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT