திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா

DIN

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள், அரியலூா் மாவட்டம் தா. பழூா் சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு இயற்கை பண்ணையம் குறித்த கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் அ.ஈழவேணி தலைமையில் சென்ற 50 விவசாயிகளுக்கு, கிரீடு வேளாண் அறிவியல் மையத் தலைவா் முதுநிலை விஞ்ஞானி அழகுக்கண்ணன், பயிற்சிப் பாதுகாப்பு விஞ்ஞானி அசோக்குமாா், உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் திருமலைவாசன் ஆகியோா்,

பயிா்ப் பாதுகாப்பு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சாமிராஜ், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT