அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருகே மேலநத்தம் பகுதியைச் சோ்ந்த மறைந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் மா.வேம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு,
ஸ்ரீ கோகுல கண்ணன் ரத்த தான அறக்கட்டளை, மா.வேம்பு யாதவ் நினைவு கல்வி மற்றும் ரத்த தான அறக்கட்டளை சாா்பில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, அறக்கட்டளைத் தலைவா்க எஸ். கொம்பையா, ஆலோசகா் எஸ். கணபதி ராமன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், பொட்டல் எஸ்.துரை, வி.இளங்கோ, அறக்கட்டளை உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.