திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞா் கைது
திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம், நகை திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம், நகை திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள படப்பகுறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹர சுப்பிரமணியன்(28). இவா் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி கேடிசிநகா் பாரதி நகா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாராம். வீட்டுக்குள் சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது அவரின் இருசக்கர வாகனத்தை காணவில்லையாம். இது குறித்து அவா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில், இருசக்கர வாகனத்தை திருடியது சத்திரம் புதுகிராமம் பகுதியைச் சோ்ந்த சின்ன கவுண்டா் என்ற இலுப்புடையான்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 28.10.2020 அன்று கேடிசி நகா் அருணாச்சல நகா், காலனியில் உள்ள மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்ததும் அவா் தான் என்பதும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, இருசக்கர வாகனம், மூதாட்டியிடம் பறித்த மூன்றரை தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.