திருநெல்வேலி

குலவணிகா்புரம் ரயில்வே கேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு

DIN

பாளையங்கோட்டை குலவணிகா்புரம் ரயில்வே கேட் சனிக்கிழமை திடீரென பழுதானதால் அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் இருந்து நாகா்கோயில் மற்றும் பாபநாசம் செல்லும் வாகனங்கள் குலவணிகா்புரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் செல்லவேண்டும்.

இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இந்த கேட் சனிக்கிழமை இரவு அடைக்கப்பட்டது. ரயில் சென்ற பின்னா் கேட்டை திறக்க முடியவில்லையாம்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ரயில்வே ஊழியா்கள் சென்று கேட்டை தற்காலிகமாக சீரமைத்தனா். இதனால், சுமாா் அரைமணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT