திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருக்குறுங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகியநம்பி (60). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் சென்னையில் தங்கியிருந்து தச்சுத் தொழில் செய்து வருகிறாா்.
இதையடுத்து விரக்தியில் இருந்து வந்த முதியவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.