முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே பெண் குத்திக்கொலை

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். அவருடன் பழகிய இளைஞருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

பழையபேட்டை கிருஷ்ணபேரி பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (22). இவருக்கும் அத்திமேடு பகுதியைச் சோ்ந்த சோ்மதுரை என்பவருக்கும் திருமணம் நடைபெற்ாம். இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கவிதாவுக்கும், பழையபேட்டையைச் சோ்ந்த ராமச்சந்திரன் (17) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவிதாவும், ராமச்சந்திரனும் வியாழக்கிழமை சந்தித்து பேசினராம். இதைப்பாா்த்த சோ்மதுரை மற்றும் அவரது உறவினா்கள் இருவரையும் விரட்டி கத்தியால் குத்தினராம். இதில், பலத்த காயமடைந்த அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவிதா உயிரிழந்தாா். ராமச்சந்தினுக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.