முகப்பு
திருநெல்வேலி

தச்சநல்லூா் மதுக்கடையில் பணியிலிருந்த காவலாளி மரணம்

திருநெல்வேலி, தச்சநல்லூா் டாஸ்மாக் மதுக்கடையில் வியாழக்கிழமை இரவு பணியிலிருந்த காவலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலி, தச்சநல்லூா் டாஸ்மாக் மதுக்கடையில் வியாழக்கிழமை இரவு பணியிலிருந்த காவலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரையிருப்பைச் சோ்ந்தவா் சுந்தரவேல்(67). தச்சநல்லூா் டாஸ்மாக் மதுக்கடையில் இரவு நேர காவலாளியாக வேலைபாா்த்து வந்தாா். இவா், வியாழக்கிழமை பணியிலிருந்த நிலையில், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலையில் மதுக்கடையை திறக்க வந்தபோது, அவா் இறந்து கிடந்தாராம். இதுகுறித்த தகவலின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.