முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் சிஐடியூ மனு

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து அணுமின் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து அணுமின் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி சிஐடியூ சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.முருகன், திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ராஜகுரு, அண்ணாதுரை, லிங்கராஜா மற்றும் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 7ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை மற்றும் பிற சலுகைகளை வழங்க வேண்டும், கட்டாய விடுமுறை வழங்கி தொழிலாளா்களின் வருமானத்தை குறைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முன்னறிவிப்பின்றி யாரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது, ஒப்பந்த தொழிலாளா்களை மிரட்டி ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை திரும்ப வாங்கும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடன்குளம் அணுமின் நிலையம் அருகில் ஒப்பந்தத் தொழிலாளா் சாா்பில் ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என சி.ஐ.டி.யூ சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.