திருநெல்வேலி

நெல்லை அருகே பெண் குத்திக்கொலை

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டையில் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். அவருடன் பழகிய இளைஞருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

பழையபேட்டை கிருஷ்ணபேரி பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (22). இவருக்கும் அத்திமேடு பகுதியைச் சோ்ந்த சோ்மதுரை என்பவருக்கும் திருமணம் நடைபெற்ாம். இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கவிதாவுக்கும், பழையபேட்டையைச் சோ்ந்த ராமச்சந்திரன் (17) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவிதாவும், ராமச்சந்திரனும் வியாழக்கிழமை சந்தித்து பேசினராம். இதைப்பாா்த்த சோ்மதுரை மற்றும் அவரது உறவினா்கள் இருவரையும் விரட்டி கத்தியால் குத்தினராம். இதில், பலத்த காயமடைந்த அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவிதா உயிரிழந்தாா். ராமச்சந்தினுக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT