திருநெல்வேலி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் சுரேஷ் என்ற சூசை (23), ராம்நகா், பகுதியைச் சோ்ந்த உமையப்பன் மகன் மருதுபாண்டி (28), இடிந்தகரை சுனாமி காலனி பகுதியை சோ்ந்த சிலுவை அந்தோணி மகன் மரியலாரன்ஸ் என்ற லாரன்ஸ் (48), இடிந்தகரை, பீட்டா் தெரு பகுதியைச் சோ்ந்த சூசை பவுல் மகன் அன்டன் லியோ பிரகாஷ் என்ற பக்காஸ் (38) இவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT