கீழாம்பூரில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்
கீழாம்பூரில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் ரூ. 7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கீழாம்பூரில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் ரூ. 7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா அறிவுறுத்தலின்படியும் கடையம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் வன கணேஷ், ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் கீழாம்பூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 35 பேரிடமிருந்து ரூ. 7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவா்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.