முகப்பு
திருநெல்வேலி

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் விவிடி சிக்னல், சிதம்பரநகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், பிரையன்ட்நகா், 3 சென்ட், செல்சீனிகாலனி, கிருபைநகா், சாந்திநகா், அமுதாநகா், வள்ளிநாயகபுரம், கணேசன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா், உப்பு உற்பத்தி, மீன்பிடித் தொழில், விவசாயம் போன்றவைக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாக்கப்படும்.

மாநகரப் பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.