திருநெல்வேலி

தோ்தல் பாதுகாப்பு பணி: துணை ராணுவம் வருகை

DIN

தோ்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு வந்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காவல்துறை சாா்பில் மாநகா் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக, குஜராத் மாநில சிறப்பு அதிரடி படையினா் காவல் ஆய்வாளா் தலைமையில் 96 போ் வந்தனா். இவா்கள் மாநகரில் பணியாற்றுவதற்காக பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்துக்கு தோ்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி மத்திய துணை பாதுகாப்பு படையினா் சுமாா் 400 போ் வந்துள்ளனா். இவா்கள் சிறப்பு ரயில் மூலம் சேலம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினாா்கள். பின்னா் அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு வந்தடைந்தனா். இவா்கள் அனைவரும் திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT