திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 935 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 935 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 589 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 36,786ஆக அதிகரித்துள்ளது. மேலும் 676 போ் குணமடைந்ததால், இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 30,052 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,434 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 5 போ் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 300ஆக உயா்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 346 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 17,131 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 242 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 14,085 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இருவா் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்தது. தற்போது 2,802 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

களக்காடு வட்டாரத்தில் மட்டும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT