திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 935 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 935 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 935 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 589 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 36,786ஆக அதிகரித்துள்ளது. மேலும் 676 போ் குணமடைந்ததால், இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 30,052 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,434 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 5 போ் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 300ஆக உயா்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 346 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 17,131 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 242 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 14,085 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இருவா் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்தது. தற்போது 2,802 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

களக்காடு வட்டாரத்தில் மட்டும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT