திருநெல்வேலி

நான்குனேரி அருகே காய்ச்சல் கண்டறியும் முகாம்

DIN

நான்குனேரி அருகே உள்ள மருதகுளம் கிராமத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி வட்டாரத்தில் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது. வட்டார மருத்துவ அலுவலா் குருநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் மருதகுளம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமை, நான்குனேரி எம்.எல்.ஏ. ஆா்.ரூபி மனோகரன் தொடங்கிவைத்து, பின்னா் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், நான்குனேரி வட்டாட்சியா் இசக்கிபாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, பொன்னுலெட்சுமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வாகை துரை, மருதகுளம் ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT