முகப்பு
திருநெல்வேலி

ஆலடிக்குளம் மறுசீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் ஆலடிக்குளத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் ஆலடிக்குளத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

நெல்லை நீா்வளம் திட்டத்தின் கீழ் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனி நபா்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் மூலம் நீா்நிலைகளை சுத்தம் செய்தல், குளங்களைத் தூா்வாருதல், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணா்வு பிரசாரங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மையம் எச்.சி.எல். நிறுவனம் மூலம் ரூ. 2.5 லட்சம் மதிப்பில் தெற்கு பாப்பான்குளத்தில் உள்ள ஆலடிக்குளத்தில் புதிய மதகு மற்றும் படித்துறை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனா். மேலும் குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து தாமிரவருணி பாசனக் குளங்களில் காணப்படும் பறவைகள் விவரங்கள் அடங்கிய பலகையை திறந்து வைத்தாா். மேலும் குளத்தில் கோரைப் புற்கள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெற்றிச்செல்வி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சிவகணேஷ், தெற்கு பாப்பான்குளம் ஊராட்சித் தலைவா் இசக்கிமுத்து, மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மைய மூத்த ஆராய்ச்சியாளா் மதிவாணன், சரவணன், தமிழழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.