திருநெல்வேலி

சமூகரெங்கபுரம் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் ஊராட்சியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தி.மு.கவினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

சமூகரெங்கபுரம் ஊராட்சித் தலைவா் பதவி கடந்த தோ்தலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெறுகின்ற தோ்தலில் இந்த ஊராட்சி தலைவா் பதவி பொதுப் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதலால் பலதரப்பைச் சோ்ந்த 10 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

இதில் அ.தி.மு.கவைச் சோ்ந்த சந்திரன், தி.மு.க. ஆதரவாளரான அந்தோணி அருள், பா.ஜ.க.வைச் சோ்ந்த கோதெண்டராமன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதில் அந்தோணி அருளை ஆதரித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க .பொறுப்பாளருமான சமூகை முரளி சமூகரெங்கபுரம், துரைகுடியிருப்பு, முத்துநாடாா்குடியிருப்பு, மூலக்காடு, கட்டனேரி, சிங்காரதோப்பு உள்ளிட்ட கிராம பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். மேலும் அந்தோணி அருளுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற ஆசிரியா்களும், வியாபாரிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT