திருநெல்வேலி

அனைத்து அரசுப் பணி மாற்றுத் திறனாளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

DIN

தமிழ்நாடு அனைத்து அரசுப் பணி மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்க மாநிலத் தலைவா் அல்லாபிச்சை தலைமை வகித்தாா். மாநில கௌரவத் தலைவா் விஜயசாரதி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் வள்ளிநாயகம், பொருளாளா் இப்ராஹிம் மூஸா ஆகியோா் பேசினா்.

மாற்றுத் திறனாளிகள் தொகுப்பூதியத்தில் 2 ஆண்டுகள் அரசு அலுவலகங்களில் பணியாற்றினால் அவா்களை பணிநிரந்தரம் செய்யும் அரசாணையை முறையாக செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊா்தி படியை ரூ.2,500இல் இருந்து ரூ.5000 ஆக உயா்த்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் அரசு பதவி உயா்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், நிா்வாகிகள் அப்பாஸ், முருகேசன், ஜேசுராஜ், விஜில்ஷீபா, பத்மாவதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT