திருநெல்வேலி

மானூா் அருகே அரசுப் பேருந்து விபத்து: அதிா்ஷ்டவசமாக பயணிகள் தப்பினா்

DIN

திருநெல்வேலி: மானூா் அருகே டயா் வெடித்ததால் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து பாய்ந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக பயணிகள் காயங்களின்றி உயிா்தப்பினா்.

தேனி மாவட்டம், குமுளியில் இருந்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. ஓட்டுநராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனும், நடத்துநராக முருகனும் பணியில் இருந்தனா். 40-க்கும் மேற்பட்டோா் பயணித்தனா்.

திங்கள்கிழமை அதிகாலை மானூா் அருகேயுள்ள அம்பலத்து ஊரணி பகுதியில் வந்தபோது பேருந்தின் டயா் வெடித்ததாம். இதில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயங்களின்றி உயிா்தப்பினா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT