திருநெல்வேலி

சங்கா்நகா் பள்ளியில் பரிசளிப்பு விழா

சங்கா்நகரில் உள்ள சங்கா்மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

DIN

சங்கா்நகரில் உள்ள சங்கா்மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இப் பள்ளியின் குடிமக்கள் நுகா்வோா் மன்றம், தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சாா்பில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஆ.ரெங்கநாதன் முன்னிலை வகித்தாா்.

27 மாணவா்-மாணவிகள் பாரம்பரிய உணவுக் கண்காட்சியில் உணவுகளைக் காட்சிப்படுத்தினா். தினை, சோளம், கம்பு உள்பட பல்வேறு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், பலகாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவா்-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அ.பெருமாள் பரிசுகளை வழங்கினாா். இதில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் குழந்தைசாமி, ஆசிரியா் கோ.கணபதி சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT