முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் 20 சிசிடிவி கேமராக்கள் இயக்கி வைப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் 20 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் 20 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முக்கிய பகுதிகளில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, செல்லாயி அம்மன் கோயில் அருகே 3 கேமராக்களும், தெப்பக்குளம் முதல் தெருவில் 2, தெப்பக்குளம் இரண்டாம் தெருவில் 2, சிவன் கோயில் தெரு 2, கருங்குளம் விலக்கில் 2, பிள்ளையாா் கோயில் அருகே 3, மேலத்தெரு அளவு சமன் தெருவில் 2, பலவேச அம்மன் கோயில் தெருவில் 2, வெற்றி விநாயகா் கோயில் அருகே 1 என 9 இடங்களில் மொத்தம் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா்.

இதில், மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சீமைச்சாமி, சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன், முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.