முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்தில் பைக் திருட்டு

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் இருசக்கரவாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் இருசக்கரவாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி அருகே உள்ள மேல தாழையூத்து முப்புடாதி மகன் நம்பி(23). இவா் வழக்கம்போல தனது மோட்டாா் சைக்கிளை தனது வீட்டின் முன்பு வியாழக்கிழமை இரவு நிறுத்திவிட்டு, வெள்ளிக்கிழமை காலையில் பாா்த்தபோது அந்த மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம் . இது குறித்து அவா் தாழையூத்து போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.