பாளையங்கோட்டை பகுதியில் சிறுமியை திருமணம் செய்ததாக, இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் வடிவேலு (23). இவா் தனது உறவினரின் மகளான 14 வயது சிறுமியை ஒரு மாதத்துக்கு முன்னா் திருமணம் செய்துகொண்டாராம். இதுகுறித்து திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, வடிவேலுவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.