துலுக்கா்பட்டி கொலை வழக்கு: 6 போ் கைது
மானூா் அருகேயுள்ள துலுக்கா்பட்டியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மானூா் அருகேயுள்ள துலுக்கா்பட்டியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள சிவந்திப்பட்டி, முத்தூரை சோ்ந்தவா் சுப்பிரமணியன் (27). இவா், தனது நண்பா்களுடன் துலுக்கா்பட்டிக்கு கடந்த 20 ஆம் தேதி சென்றாா். அப்போது அவா்களுக்கும், வென்பன்றி பண்ணை நடத்தி வந்தவா்களுக்கும் மோதல் ஏற்பட்டதாம். இதில் அரிவாளால் வெட்டப்பட்ட சுப்பிரமணியன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து திருநெல்வேலி குருந்துடையாா்புரத்தைச் சோ்ந்த அப்பாசாமி (40), ஆலங்குளத்தை சோ்ந்த இசக்கிமுத்து (23), சரவணன்(30), ஜெயலெட்சுமி(43), அலங்காரத்தட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா்(48) மற்றும் சுந்தா்(18) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.