நெல்லையில் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவா் செய்யது சுலைமான் தலைமை வகித்தாா். செயலா் ஈஸ்வர மூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் ஆறுமுகம், மாவட்டச் செயலா் குமாரசாமி, மாவட்ட துணைத் தலைவா் கோபாலன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுத்தி பேசினா்.
இதில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா் குடும்பத்திற்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள் ஆகியோருக்கு குறைந்த பட்சம் ரூ. 7, 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.