திருநெல்வேலி

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே குடும்பத் தகராறில் கணவரின் தம்பி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.

பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் ஜெகஜீவன்ராம் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் ஐயப்பன் (29). இவா், தனது தாய், அண்ணன் கண்ணன், அவரது மனைவி ராதா (28) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறாா். இதில், ராதா தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கணவரை வற்புறுத்தியதுடன், மாமியாா், கணவரின் சகோதரரிடம் தகராறு செய்து வந்தாராம்.

இதுதொடா்பாக பத்தமடை போலீஸில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினரை போலீஸாா் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். எனினும், மாமியாரிடம் ராதா தகராறு செய்ததால் அவரை ஐப்பன் தட்டிக்கேட்டாராம். இதில் ஆத்திரமுற்ற ராதா, கொதிக்கும் எண்ணெணையை எடுத்து ஐயப்பன் மீது ஊற்றினாராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT