முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நகரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:30 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

திருநெல்வேலி நகரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கழகத்தின் மாநிலக்குழு உறுப்பினா் பேச்சிராஜா தலைமை வகித்தாா். இதில், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதிகேட்டும், மாணவி உயிரிழந்த பள்ளி உரிமத்தை ரத்து செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தின் மாநிலத் தலைவா் சுந்தர்ராஜ், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஜி.ரமேஷ் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா். இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கணேசன், கருப்பசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.