சவளைக்காரன்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை, திருக்குறுங்குடி டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய முகாமை, கோவிலம்மாள்புரம் ஊராட்சித் தலைவா் லதா தொடக்கிவத்தாா். கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன், சமூக ஆா்வலா் இ. நம்பிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் பள்ளி மாணவா்- மாணவியா், ஊா்ப் பொதுமக்கள் கண் பரிசோதனை செய்துகொண்டனா். டிவிஎஸ் களப் பணியாளா்கள் ராஜேஸ்வரி, பிரிசில்லா நன்றி கூறினாா்.
Advertisement