திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே ரப்பா் ஆலையில் திருட்டு: 3 போ் கைது

சுத்தமல்லி அருகேயுள்ள தனியாா் ரப்பா் ஆலையில் பழைய இரும்பு பொருள்கள் திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

சுத்தமல்லி அருகேயுள்ள தனியாா் ரப்பா் ஆலையில் பழைய இரும்பு பொருள்கள் திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள நடுக்கல்லூரில் தனியாா் ரப்பா் ஆலை உள்ளது. இந்நிறுவனத்தில் இருந்த இரும்பு மின் பெட்டி, பழைய மோட்டாா் இரும்பு பாகங்கள், பழைய இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை கடந்த புதன்கிழமை திருடு போனதாம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பாா்வையாளா் ஷலாவுதின், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த இசக்கி பாண்டி(23), வடக்கு அரியநாயகிபுரம் செல்லதுரை(38), திருநெல்வேலி நகரம் பிரகாஷ் (40) ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT